
எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தினர் இன்று (04) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்க பிரதிநிதிகள் அரசாங்கத்தை அவமானப்படுத்தும் நோக்கில், எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை சீர்குலைக்க முயற்சிப்பதாக கூறி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
அது தொடர்பான விசாரணைக்காக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்க துணைத் தலைவர் குசும் சந்தநாயக்க மற்றும் சாந்த சில்வா உள்ளிட்ட பணிப்பாளர்கள் குழுவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று மதியம் 12.30 மணிக்கு எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் துணைத் தலைவரும், இயக்குனர் குழு உறுப்பினரும் குற்றப் புலனாய்வுத் துறையில் அறிக்கை அளிக்க உள்ளனர்.