குளியாப்பிட்டிய பகுதியில் துப்பாக்கிச் சூடு!

குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவில் நேற்று (03) மாலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவின் பிடதெனிய பகுதியில் உள்ள ​தோரபிட்டி தோட்டத்தில் தேங்காய் பறிக்க அனுமதியின்றி தோட்டத்திற்குள் நுழைந்ததற்காக குறித்த நபர் காவலாளியால் சுடப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக குளியாப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டை நடாத்தியவர் மெதிரிகிரிய பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் ஆவார்.

குறித்த நபர் துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்திய 12 துளை துப்பாக்கியுடன் குளியாப்பிட்டிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த துப்பாக்கிக்காக 2025 ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி உரிமம் வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply