தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்து அமைச்சரின் கருத்து!

அரசாங்க வைத்திய அதிகாரிகளின் மேலதிக பணிக்கொடுப்பனவு மற்றும் விடுமுறை கொடுப்பனவு குறைப்பு தொடர்பில் எதிர்ப்பு வெளியிட்டு மார்ச் 5 ஆம் திகதி முதல் நாடளாவிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் இன்றைய (04) நாடாளுமன்ற அமர்வில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ கருத்து வெளியிட்டிருந்தார். அதாவது,

தொழிற்சங்கப் போராட்டம் இல்லாமலேயே, இந்த அரசாங்கம் அனைத்து வைத்தியர்களுக்கும் குறிப்பிடத்தக்க சம்பள உயர்வை அமுல்படுத்தியுள்ளது.

அதன்படி, இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் வைத்தியர்களுக்கு அடிப்படை சம்பளம், விடுமுறை கொடுப்பனவுகள், கூடுதல் நேர கொடுப்பனவுகள் மற்றும் வரிச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், சுகாதார அமைச்சின் வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 6 ஆம் திகதி விவாதிக்கப்படும் நேரத்தில் இதுபோன்ற தொழிற்சங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், இதுபோன்ற நியாயமற்ற தொழிற்சங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படக்கூடாது என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply