கிழக்கு மாகாணத்தில் உருவாகியுள்ள முஸ்லிம் தீவிரவாதக் குழு- அமைச்சர் தகவல்!

கிழக்கு மாகாணத்தின் கல்முனை பிரதேசத்தை மையமாகக் கொண்டு ஒரு முஸ்லிம் தீவிரவாதக் குழு உருவாகி வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று (04) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.

குறித்த குழு தொடர்பில் உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு பிரிவு தகவல்களை திரட்டி வருவதாக குறிப்பிட்டார்.

அத்துடன் ஜனாதிபதியும் பாதுகாப்பு பிரிவின் செலவுத் தலைப்புக்கு வந்து சில விடயங்களைச் சுட்டிக்காட்டியதாக தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பில் தற்போது எங்களால் கூற முடிவது, ‘பாதுகாப்பு பிரிவு இது தொடர்பாக மிகவும் விழிப்புடன் உள்ளன’ என்பது மட்டும் தான் என தெரிவித்தார்.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply