
இலங்கை மின்சார சபை ஜனவரியில் ஏற்படுத்திய மின்சார கட்டண திருத்தத்தினால், மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான செலவு ஈடுகட்டப்படாது என்றும் இதனால் இலங்கை மின்சார சபை எதிர்கொள்ளும் இழப்புகளைத் தடுக்க முடியாது என்றும் சர்வதேச நாணய நிதியம் மதிப்பிட்டுள்ளதாக இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் சார்பில் சிரேஷ்ட தூதுக்குழு பிரதானி பீட்டர் பிரூவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இதன் விளைவாக, இலங்கை மின்சார சபையின் கடன்கள் மீண்டும் குவியும் அபாயம் இருப்பதாகவும், அதனால் இலங்கை மின்சார சபை மீண்டும் அரசாங்கத்திற்கு சுமையாக மாறும்.
இலங்கை மின்சார சபை அரசாங்கத்திற்கு எவ்வளவு சுமையாக இருக்கும் என்பது அனைவருக்கும் அனுபவம் உள்ளதால், வரவிருக்கும் மின்சார கட்டண திருத்தத்தில் செலவு ஈடுகட்டும் மின்சார விலையை மீண்டும் நிர்ணயிப்பது அவசியம்.
இழப்புகளை ஏற்படுத்தாத வகையில் விலைகளை நிர்ணயிப்பதற்கான தானியங்கி வழிமுறைகள் ஏற்கனவே உள்ளதாகவும், அவை செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.