விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் நவீன சாதனம்!

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்பீட் கன் சாதனங்கள் இலங்கை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றுள்ளன.

இலங்கையில் தற்போது அதிகரித்து வரும் போக்குவரத்து விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் இந்த நவீன சாதனம் கிடைக்க பெற்றுள்ளது.

இரவில் மிகவும் திறம்பட பயன்படுத்தக்கூடிய இந்த சாதனம் 1.2 கிலோமீட்டர் தொலைவில் வரும் வாகனத்தைப் பிடிக்கும் திறன் கொண்டது.

அத்துடன் இதன் மூலம் பதிவு செய்யப்பட்ட வீடியோவை நீதிமன்றத்தில் சாட்சியாக சமர்ப்பிக்கவும் முடியும் என்றும், வாகனத்தின் வேகம், சாரதியின் புகைப்படம் மற்றும் வாகனத்தின் இலக்கம் உள்ளிட்ட பல தகவல்களைப் பெற முடியும் என்றுm பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply