உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் திட்டமிடவும், அவை தொடர்பாக எழும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடவும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட உதவி தேர்தல் ஆணையர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி இது தொடர்பான கலந்துரையாடல் எதிர்வரும் சனிக்கிழமை (08) தேர்தல்கள் ஆணைக்குழுவில் நடத்தப்படவுள்ளதாக தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
