
2025 வரவு செலவு திட்டத்தில் மேலதிக நேரக் கொடுப்பனவு குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை (06) பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாக அதன் ஒருங்கிணைப்பாளர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
வைத்தியர்களுடனான கலந்துரையாடலிலும் கூட அவர்கள் கோரிய கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் தவறியுள்ளதால், தங்களுக்கு நியாயமான கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும் எனக் கோரி நாளைய தினம் 3 மணிநேர பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
அதன்படி, நாளை காலை 10 மணி முதல் 3 மணித்தியாலங்களுக்கு இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளனர்.