வெளிநாட்டு பெண்ணிடம் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரியா நாட்டு பெண்ணிடம், வௌிநாட்டு சிகரெட்டுகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக 50,000 ரூபா இலஞ்சம் கோரியமையாலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு சார்ஜென்ட் மற்றும் 2 கான்ஸ்டபிள்கள் உள்ளிட்ட மூவருமே இந்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
