வாகன இறக்குமதியாளர்களுக்கு நிதி அமைச்சகத்தின் நிபந்தனைகள்!

வாகனங்களை இறக்குமதி செய்யும் எந்தவொரு இறக்குமதியாளரும் 6 மாத காலத்துக்குள் இறக்குமதி செய்யப்பட்ட மொத்த வாகனங்களின் எண்ணிக்கையில் 25% சதவீதத்தை பதிவு செய்யத் தவறினால், குறித்த இறக்குமதியாளரின் இறக்குமதி அனுமதி இரத்துச் செய்யப்படும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்நியச் செலாவணி இருப்புகளைப் பாதுகாக்கவும், அதிகப்படியான வாகனங்களை இறக்குமதி செய்வதைத் தடுக்கவும், தேவையற்ற முறையில் வாகனங்களின் சேமிப்பைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், தனிப்பட்ட ரீதியாக வாகனங்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால், ஒரு வாகனத்தை மட்டுமே இறக்குமதி செய்ய முடியும் என்றும், மேலே குறிப்பிடப்பட்ட நிபந்தனைகள் அதற்குப் பொருந்தாது என்றும் நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

வாகன இறக்குமதி தொடர்பான அரசாங்க நிதிக் குழுவின் சமீபத்திய கூட்டத்தில் இந்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டன.

இங்கு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு நாயகம் உப்புல்மாலி பிரேமதிலகா கருத்து தெரிவிக்கையில்,

2020 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.” தற்காலிக இடைநிறுத்தத்தை நிறுத்தி வைப்பதற்காக இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டது.

எனினும், தற்போது HS குறியீடு 304 இன் கீழ் உள்ள வாகனங்கள் இலங்கைக்குள் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் 90 நாட்களுக்குள் பதிவு செய்யப்பட வேண்டும்.

அவ்வாறு செய்யத் தவறினால் CIF-இல் மூன்று வீதம் அபராதம் விதிக்கப்படும், அதிகபட்சம் 45 வீதம் வரை அபராதம் விதிக்கப்படும்.

மேலும், இறக்குமதி செய்யப்பட்ட அளவில் 25 வீதம் ஆறு மாதங்களுக்குள் பதிவு செய்யப்படாவிட்டால், அவர்களின் இறக்குமதி செய்யும் திறன் நிறுத்தி வைக்கப்படும். “அந்த நிபந்தனைகளின் கீழ் வாகனங்களை இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட அனுமதி இடைநிறுத்தப்படும் என்று தெரிவித்தார்.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply