காலை 8.00 மணியுடன் நிறைவுக்கு வந்தது அரச மருத்துவ அதிகாரிகள் சங்க போராட்டம்!

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியரை இனந்தெரியாத நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட அடையாள வேலைநிறுத்த போராட்டம் இன்று (13) காலை 8.00 மணியுடன் நிறைவுக்கு வந்தது.

எனினும் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களால் தொடங்கப்பட்ட வேலைநிறுத்த போராட்டம் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போதிலும், சம்பந்தப்பட்ட வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வரையில் போராட்டம் தொடருமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாசவுடன் நடைபெறவுள்ள கலந்துரையாடலைத் தொடர்ந்து, வேலைநிறுத்தம் தொடருமா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அனுராதபுர கிளையின் செயலாளர் வைத்தியர் சசிக விஜேநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply