
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியரை இனந்தெரியாத நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களால் தொடங்கப்பட்ட வேலைநிறுத்த போராட்டம் தொடர்ந்த நிலையில் தற்போது கைவிடப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் தங்கள் வேலைநிறுத்தத்தை கைவிடுவதற்கு தீர்மானித்ததாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.