
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் புளியங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நயினாமடு பிரதேசத்தில் வைத்து நேற்று (12) இரவு கைது செய்யப்பட்டார்.
பொல்பிதிகம பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நயினாமடு பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் முன்னெடுத்துளளமை குறிப்பிடத்தக்கது.