யாழில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்!

பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்றைய தினம் (13) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வல்லமை சமூக மாற்றத்திற்கான போராட்ட இயக்கத்தின் பௌர்ணமி நாள் செயற்பாட்டுத் தொடர்ச்சியில் பெண்களுக்கு எதிரான அனைத்துச் சுரண்டல்களையும் முடிவுக்கு கொண்டுவர ‘மௌனத்தை கலைப்போம்’ எனும் தொனிப் பொருளில் மக்கள் கவனயீர்ப்பு செயல்வாதம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட குறித்த கவனயீர்ப்பு போராட்ட பேரணியானது, தந்தை செல்வா கலையரங்கு வரை சென்று மகஜர் கையளிப்புடன் நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply