
“புகுடு கண்ணா” என்றும் அழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி பாலச்சந்திரன் புஷ்பராஜின் சகோதரர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் இந்தியாவில் இருந்து போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இன்று (13) அதிகாலை நாட்டிற்கு வருகை தந்த போது விமான நிலைய குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு 10, ஜம்பட்டா தெருவைச் சேர்ந்த 36 வயதான பாலச்சந்திரன் கஜேந்திரன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.