கண்டியிலிருந்து பதுளை நோக்கி பயணித்த சரக்கு ரயிலொன்று நானு ஓயா ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது.
குறித்த ரயில் இன்று காலை 10.30 மணியளவில் தடம்புரண்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த மார்க்கத்தின் ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
