மட்டக்களப்பு சந்திவெளி காவல்துறை பிரிவிலுள்ள முறக்கொட்டான்சேனை காட்டையண்டிய பகுதியில் வீசிய நிலையில் ஆண் குழந்தை ஒன்று சடலமாக இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்த பெண் ஒருவர் அந்த குழந்தையை உரப்பையில் கட்டிக் கொண்டு சென்று அதனை சந்திவெளி காவல் நிலையத்தில் இருந்து சுமார் 3 கிலோமீற்றர் தூரம் கொண்ட மூறக்கொட்டான்சேனை காட்டையண்டிய பகுதியில் வீசிவிட்டு செறுள்ளார்.
குறித்த பகுதியில் இன்று காலை 9.00 மணியளவில் சடலம் ஒன்று இருப்பதை கண்டு பொதுமக்கள் காவல்துறையினருக்கு தெரிவித்ததனர்.
இதனையடுத்து காவல்துறையினர் நீதிமன்ற உத்தரவை பெற்று சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த குழந்தை இன்று பிறந்துள்ளதாகவும், குழந்தையை பெற்றெடுத்து வீசிய பெண்ணை தேடிவருவதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சந்திவெளி காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
