அத்துருகிரியவின் ஹோகந்தர பகுதியில் உள்ள தேசபந்து தென்னகோனுக்கு சொந்தமான வீட்டை குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் நேற்று (18) பிற்பகல் சோதனை செய்தனர்.
சோதனை நடவடிக்கையின் போது வீட்டில் இருந்து சில சந்தேகத்திற்குரிய பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
