தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று (19) மாலை, பல்கலைக்கழகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்களின் கற்றல் உபகரணங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கின்ற வரியை அரசாங்கம் முற்றாக நீக்க வேண்டும் என்றும், பல்கலைக்கழகத்தில் புதிய விடுதிகளை உடனடியாக அமைக்க வேண்டும் என்றும் கோரி அம்பாறை மாவட்டம் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதேவேளை அம்பாறை – அட்டாளைச் சேனை பகுதியிலும் நேற்று தொழிற்சங்க போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் முன்பாக இந்த போராட்டம் இடம்பெற்றது.

பொது மக்களின் வாழ்க்கைச்செலவை குறைத்து, அரச ஊழியர்களின் தேறிய சம்பளத்தை அதிகரிக்க கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் அம்பாறை மாவட்டம் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தொழிற்சங்கத் தலைவர் கபீர் கலீல் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply