பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிடம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் இன்று (27) விசாரணை நடாத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சாமர சம்பத் தசநாயக்க ஊவா மாகாண முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில் ஏற்பட்ட ஒரு முறைகேடு தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில் குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
