
பதுரலிய பொலிஸ் பிரிவின் கெலின்கந்த வீதியில் உள்ள பாழடைந்த இடத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கைத்துப்பாக்கி ஒன்றும் இரண்டு தோட்டாக்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
களுத்துறை மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது பாழடைந்த இடத்தில் புதைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி ஒன்றும் இரண்டு தோட்டாக்களும் மீட்கப்பட்டிருந்தன.
துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை மறைத்து வைத்திருந்த சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக களுத்துறை மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.