க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான தகவல்!

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் வெளியிடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருவதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவது தொடர்பான பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளதாகவும், புத்தாண்டுக்கு முன்னர் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

க.பொ.த உயர்தரப் பரீட்சையானது 2024, நவம்பர் 25 ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 20 ஆம் திகதி முடிவடைய திட்டமிடப்பட்டிருந்த நிலையில், சீரற்ற வானிலை காரணமாக பிற்போடப்பட்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரை பரீட்சை நடாத்தப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply