கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவது தொடர்பில் நேற்று சமூக ஊடகங்களில் வெளியான தகவல் போலியானது என்றும், பரவும் போலியான செய்திகள் தொடர்பில் விழிப்புணர்வுடன் இருக்குமாறும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவது தொடர்பில் எவ்வித உத்தியோகப்பூர்வ அறிவிப்பும் விடுவிக்கப்படவில்லையென பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்தார்.
