ஐ.பி.எல் அட்டவணையில் ஏற்பட்ட மாற்றம்!

டி20 தொடரான ஐ.பி.எல் 18-வது சீசன் கடந்த 22ம் திகதி ஆரம்பமாகி இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் போட்டி அட்டவணையை மாற்றி அமைக்க ஐ.பி.எல் நிர்வாகத்திற்கு கொல்கத்தா பொலிசார் வேண்டுகோள் விடுத்தனர்.

ஏப்ரல் 6ஆம் திகதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு நடைபெற இருந்தது.

அன்றைய தினம் ராம நவமியாகும். ராம நவமி தினத்தில் கொல்கத்தாவில் பாஜக அமைப்பு பேரணி நடாத்த இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தது.

இதனால் கொல்கத்தா முழுவதும் அதிகளவில் பொலிசார் குவிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அதே தினத்தில் போட்டி நடைபெற இருப்பதால் பாதுகாப்பிற்கு பொலிஸ் குவிக்க முடியாத நிலை ஏற்படும். இதனால் 6ஆம் திகதி நடைபெற இருக்கும் போட்டியை மற்றொரு திகதிக்கு மாற்றி வைக்க ஐ.பி.எல் நிர்வாகத்திற்கு கொல்கத்தா பொலிசார் வேண்டுகோள் விடுத்தனர்.

இந்த நிலையில் , குறித்த ஆட்டத்துக்கான திகதி மட்டும் தற்போது மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி கொல்கத்தா – லக்னோ இடையிலான மோதல் ஏப்ரல் 8 ஆம் திகதி மாலை 3.30 மணிக்கு கொல்கத்தா மைதானத்தில் நடைபெறும் என்று கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply