
எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவையை இயக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.
அதன்படி, பண்டிகைக் காலத்தில் பொதுமக்களின் வசதிக்காக 500க்கும் அதிகமான பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்தார்.
இந்த திட்டம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் முதல் கட்டம் 9 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை செயல்படுத்தப்படும்.
இரண்டாம் கட்டம் ஏப்ரல் 16 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை விசேட பேருந்து சேவை இயக்கப்படும் என்று இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.