
பாடசாலை வாகன சேவை வழங்குனர் சங்கம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
அதாவது, டீசல் நிவாரணம் வழங்காவிட்டால் பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து சேவையிலிருந்து விலக வேண்டியிருக்கும் என பாடசாலை வாகன சேவை வழங்குனர் சங்கத்தின் தலைவர் ருவான் பிரசாத் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் இந்த விடயத்தில் அரசாங்கம் உடனடியாக தலையிட்டுத் தீர்வைப் பெற்றுத் தர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.