ஒளிபாய்ச்சி மீன்பிடித்த நபர் கைது!

யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டவர் இன்று (2) அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடற்படையினர் இன்று(2) அதிகாலை கட்டைக்காடு கடற்பகுதியில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது சட்டவிரோதமாக ஒளிபாய்ச்சி மீன்பிடித்த படகுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கட்டைக்காடு பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபரை விசாரணைகளின் பின் யாழ்ப்பாணம் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படை அதிகாரி தெரிவித்தார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply