
பிக்பாஸ் புகழ் தர்ஷன் தமிழ் நாடு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தர்ஷன் குடியிருக்கும் வீட்டின் அருகே கார் நிறுத்தியது தொடர்பான தொடர்பான விவகாரத்தில் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகனுக்கும், தர்ஷனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த தகராறில் இலங்கை நடிகர் தர்ஷன், நீதிபதியின் மகன், அவரது மனைவி மற்றும் மாமியாரை தாக்கியதாக ஜெ.ஜெ.நகர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டது.
தகராறில் காயமடைந்த ஒரு பெண் மற்றும் நீதிபதியின் மகன் ஆகிய இருவரும் அண்ணாநகரில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் நடிகர் தர்ஷன் தரப்பும் முறைப்பாடு அளித்திருந்தது.
இதனையடுத்து இரு தரப்பு முறைப்பாடுகள் குறித்தும் விசாரணை மேற்கொண்ட பொலிஸார், நடிகர் தர்ஷன் மற்றும் அவரது நண்பர் லோகேஷ் மீது பெண் வன்கொடுமை உள்ளிட் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஜெ.ஜெ.நகர் பொலிசார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.