வவுனியாவில் இடித்தழிக்கப்பட்ட பேருந்து நிலையம்!

வவுனியா குருமன்காடு பகுதியில் பயன்பாடற்ற நிலையில் காணப்படிருந்த பேருந்து நிலையம் இன்று நகரசபையால் அகற்றப்பட்டது.

குறித்த பேருந்து நிலையம் பயன்படுத்தப்படாத நிலையில் காணப்பட்டமையால் அதனை அகற்றுமாறு நகரசபைக்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் முறைப்பாடுகள் வழங்கப்பட்டன.

இதனையடுத்து இன்றையதினம் நகரசபையால் குறித்த தரிப்பிடம் இடித்து அகற்றப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply