
கொழும்பு உள்ளிட்ட பிரதேசங்களில் இன்று (07) மதியம் 12:12க்கு சூரியன் உச்சம் கொடுத்தது.
இதனால் மனிதர்களின் நிழல் சில நிமிடங்களுக்கு மறைந்து காணப்பட்டது.
சூரியன் ஒரே நேரத்தில் கொழும்பிற்கு மேலான வான்பரப்பில் உச்சம் கொடுப்பதால் இந்த நிகழ்வு ஏற்படுவதாக வானியலாளர் அனுர சி. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்களின் நிழல்கள் இன்று (07) மதியம் 12.12 மணிக்கு ஒரு கணம் மறைந்துவிடும் என்று வானியலாளர் அனுர சி. பெரேரா குறிப்பிட்டிருந்தார்.
குறித்த பிரதேசங்களில் அதிக வெப்பமான காலநிலை நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.