மாவை கந்தனின் கும்பாபிஷேக பெருவிழா- அன்னதானம் வழங்கிய இராணுவத்தினர்!

வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலின் கும்பாபிஷேக நிகழ்வு 50 ஆண்டுகளுக்கு பின்னர் எதிர்வரும் 11 திகதி நடைபெறவுள்ள நிலையில் பூர்வாங்க கிரியைகள் எண்ணெய் காப்பு சாத்துகின்ற நிகழ்வுகள் ஆலயத்தில் நேற்று நடைபெற்றன.

இந்த பூஜைகளில் பெரும் தொகையான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வரலாற்று சிறப்புமிக்க மாவை கந்தனின் கும்பாபிஷேக பெருவிழாவில் கலந்துகொள்வதற்காக பல ஆதீனங்கள், ஈழத்தின் பல பகுதிகளிலும், புலம்பெயர் சேசத்திலும் வாழும் மக்களும் திரண்டு வந்தவண்ணம் உள்ளார்கள்.

இந்த நிலையில், நேற்று இடம்பெற்ற எண்ணைக்காப்பு சாத்தும் கிரியைகளில், இராணுவத்தின் யாழ் மாவட்ட கட்டளைத்தளபதி கலந்துகொண்டிருந்த அதேவேளை, இலங்கை இராணுவத்தினரால் அன்னதானமும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply