
பாடசாலைகளுக்கான விடுமுறை குறித்து கல்வி அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி 2025ஆம் ஆண்டின் அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஏப்ரல் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முடிவடையும் என்று கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் ஏப்ரல் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தொடங்கி மே 9ஆம் திகதி முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.