
யாழ். சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழி பகுதியில் விபச்சாரம் நடைபெறுவதாக சந்தேகிக்கப்பட்ட வீடொன்று பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டதுடன், நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாவற்குழி தொடருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான வகையில் இயங்கி வந்த விபச்சார விடுதி, யாழ். மாவட்ட குற்ற தடுப்பு பிரிவு பொலிஸாரினால் நேற்று (09) முற்றுகையிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் 68 வயதான வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அளவெட்டி, குருநகர், கொடிகாமம் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 40, 42 மற்றும் 53 வயது உடைய மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார் குறித்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
விசாரணைகளின் பின்னர் கைதுசெய்யப்பட்ட நால்வரும், சாவகச்சேரி பொலிஸாரின் ஊடாக சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.