
கடந்த 14 ஆம் திகதி படலந்த ஆணைக்குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், படலந்த ஆணைக்குழு அறிக்கை மீதான நாடாளுமன்ற விவாதம் இன்று (10) நடைபெறுகின்றது.
இன்று காலை 9.30 மணி – 10.00 மணி வரை நிலையியற் கட்டளைகள் 22இன் 1 முதல் 6 வரை குறிப்பிடப்பட்டுள்ளவாறு நாடாளுமன்ற அலுவல்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 11.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை ‘பட்டலந்த வீடமைப்புத் திட்டத்தில் சட்டவிரோத தடுப்பு மையங்கள் மற்றும் சித்திரவதை அறைகளை நிறுவிய மற்றும் பராமரித்தல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை’ மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.
படலந்த ஆணைக்குழு அறிக்கை மீதான இரண்டாவது நாள் விவாதம், மே மாதத்தின் மற்றொரு நாளில் நடாத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இன்றைய நாடாளுமன்ற அமர்வுக்கு பின்னர், அடுத்த நாடாளுமன்ற அமர்வு மே மாதம் 8ஆம் திகதி நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.