அதிவேக நெடுஞ்சாலை பயணத்தில் வங்கி அட்டை மூலம் பணம் செலுத்தும் திட்டம்!

அதிவேக நெடுஞ்சாலை பயணத்திற்கான கட்டணங்களை வங்கி அட்டையை பயன்படுத்தி செலுத்தும் திட்டம் இந்த வாரம் தொடங்கப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி கொட்டாவ மற்றும் கடவத்தை இடமாறும் பகுதிகளுக்கு இடையே ஆரம்பிக்கப்படவுள்ள இந்த முன்னோடி திட்டத்தின் போது, பயணத்திற்கான கட்டணங்களை டெபிட், கடனட்டை மற்றும் QR குறியீடுகளைப் பயன்படுத்தி மேற்கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முன்னோடி திட்டத்தை தொடர்ந்து, மே மாதம் முதல் நாட்டிலுள்ள அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளிலும் வங்கி அட்டை மூலம் பணம் செலுத்த நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply