ஏப்ரல் 15 விடுமுறையா? அரசு வெளியிட்ட தகவல்!

ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிப்பது குறித்து இன்னும் எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.

இன்றைய (10) நாடாளுமன்ற அமர்வின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் குறிப்பிடுகையில்,

எதிர்வரும் 18ஆம் திகதி பெரிய வெள்ளி என்பதால், குறித்த வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே வேலை நாட்கள் காணப்படுகிறது. எனவே, 15ஆம் திகதி குறித்து இன்னும் எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என அமைச்சர் குறிப்பிட்டார்.

அத்துடன், ஏப்ரல் 15ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் செய்தி பொய்யானது என்றும், இது தொடர்பில் அரசாங்கம் எந்தவொரு உத்தியோகபூர்வ அறிவித்தலையும் வௌியிடவில்லை எனவும் அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply