அதிகாலையில் பதிவான துப்பாக்கி சூட்டு சம்பவம்!

கொழும்பு புறநகர் பகுதியான கிரிபத்கொட கால சந்தி பகுதியில் இன்று (11) அதிகாலை 2:30 மணியளவில் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

பொலிஸாரால் நடாத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்த நிலையில் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் இருந்த ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்த வேளை, சந்தேக நபர் தப்பிச் செல்ல முயற்சித்ததால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply