
யாழ். கொக்குவில் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த மாவா பாக்குடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கொக்குவில் பகுதியை சேர்ந்த இளைஞன் நேற்று (10) கைது செய்யப்பட்டார்.
குறித்த இளைஞனின் உடைமையில் இருந்து 94 போதை மாத்திரைகளும் , 465 கிராம் கஞ்சா கலந்த மாவா பாக்கும் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இளைஞனையும் , மீட்கப்பட்ட போதை பாக்கையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.