டிப்பர் மோதி மூதாட்டியொருவர் பலி!

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூதாட்டியொருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தின் போது சரவணபவன் மகேஸ்வரி என்ற 82 வயதுடைய மூதாட்டி ஒருவரே உயிரிழந்துள்ளார்.

வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த டிப்பர், திடீரென பயணித்தபோது வீதியின் கரையாக நடந்துசென்ற மூதாட்டியை மோதியதுடன் அவர் மீது ஏறியுள்ளது. இதனையடுத்து அந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மரண விசாரணைகளை யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

சம்பவம் தொடர்பில் 33 வயதுடைய டிப்பர் சாரதி கோப்பாய் போக்குவரத்துப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

விபத்து தொடர்பிலான மேலதிக விடரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply