
உள்ளூராட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (17) வடக்கு மாகாணத்துக்கு வருகை தரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி ஜனாதிபதி அனுர, மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் உரையாற்றவுள்ளதாக கூறப்படுகிறது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக, தேசிய மக்கள் சக்தி கட்சியினரால் இந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.