உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று (16) கைது செய்யப்பட்டுள்ளதாக கொபெயிகனே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குளியாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கொபெயிகனே பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அரலுகஸ்வெவ பிரதேசத்தில் வைத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொபெயிகனே பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொபெயிகனே பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply