
தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பாக கடந்த மார்ச் மாதம் 3 ஆம் திகதி முதல் நேற்று (16) வரை 18 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
அத்துடன் குறித்த காலப் பகுதியில், 62 கட்சி ஆதரவாளர்களும் 14 வாகனங்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தேர்தல் தொடர்பான 38 குற்றவியல் முறைப்பாடுகளும், தேர்தல் சட்டங்களை மீறிய 138 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.