பலஸ்தீனத்துக்கு எதிரான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை கண்டித்து போராட்டம்!

பலஸ்தீனத்துக்கு எதிரான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை கண்டித்து, நீர்கொழும்பு தெல்வத்தை சந்தியில் பொதுமக்கள் இன்று (18) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

‘கித்துசர’ அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போராட்டம், ‘பெரிய வெள்ளிக்கிழமை அர்த்தமுள்ளதாக்குவோம் ‘ என்ற தொனிப் பொருளில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிரான சுலோக பதாதைகளை ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கத்தோலிக்க, இஸ்லாமிய மதத் தலைவர்கள் மற்றும் மூவின மக்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply