
நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கான பிரச்சாரங்கள் ஆரம்பித்ததில் இருந்து, தேர்தல் தொடர்பான எந்தவொரு தீவிர நிலைமையும் பதிவாகவில்லை என தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பெஃப்ரல் (PAFFREL) அமைப்பு தெரிவித்துள்ளது.
எனினும் அரச சொத்துக்களை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் 20 முறைப்பாடுகளும், மற்றும் தனிநபர் தாக்குதல்கள் தொடர்பில் 15 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக பெஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் மக்கள் மத்தியில் உள்ள ஆர்வம் குறைந்த மட்டத்தில் இருப்பதாக தமது கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளதாக பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
மேலும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சுமார் 4,000 கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், தபால்மூல வாக்குகளிப்புகளை கண்காணிக்க 200 கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.