
உள்ளூராட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கடந்த 17ஆம் திகதி வட மாகாணத்துக்கு விஜயம் செய்திருந்தார்.
இதன்போது மன்னார் பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு, தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு விசேடமாக நிதி ஒதுக்கீடு செய்வது குறித்து வெளியிட்ட கருத்து தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.
கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் திங்கட்கிழமை (21) கூடவுள்ளது.