
கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தியத்தலாவ பகுதியைச் சேர்ந்த 26 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்ததார்.
ரயில் செல்லும் போது குறித்த நபர் ரயில் தண்டவாளத்தில் படுத்து உறங்கியமையால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
பெரகும்புர – அம்பெவெல ரயில் நிலையங்களுக்கு இடையில் இன்று (19) அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் ரயில் நிலையத்தில் ரயில் கடவை பணியாளராக பணி புரிபவர் என்பது தெரியவந்துள்ளது.
சமபவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பட்டிபொல பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.