ரயிலில் மோதி உயிரிழந்த ரயில் கடவை பணியாளர்!

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தியத்தலாவ பகுதியைச் சேர்ந்த 26 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்ததார்.

ரயில் செல்லும் போது குறித்த நபர் ரயில் தண்டவாளத்தில் படுத்து உறங்கியமையால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

பெரகும்புர – அம்பெவெல ரயில் நிலையங்களுக்கு இடையில் இன்று (19) அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் ரயில் நிலையத்தில் ரயில் கடவை பணியாளராக பணி புரிபவர் என்பது தெரியவந்துள்ளது.

சமபவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பட்டிபொல பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply