நாட்டில் மூடப்படவுள்ள நூற்றுக்கணக்கான பாடசாலைகள்!

நாட்டில் மாணவர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ள 100 சிறிய பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாட்டில் பத்துக்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் எண்ணிக்கை தற்போது 500ஐ தாண்டி விட்டதாக கல்வி அமைச்சு தெரிவிததுள்ளது.

அதிக எண்ணிக்கையிலான பாடசாலைகளில் இரண்டு அல்லது மூன்று மாணவர்கள் மட்டுமே கல்விகற்று வருவதும் தெரிய வந்துள்ளது.

இவ்வாறான பாடசாலைகளை மூடி, அந்த மாணவர்களை வசதிகள் உள்ள பாடசாலைகளில் சேர்ப்பதற்கான முறையான திட்டத்தைத் தொடங்குவதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply