
யாழ் பல்கலையின் பொன் விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடைபவணிக்கு பொலிஸார் தடை விதித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பழைய மாணவர்களினால் “வேராய் விழுதாய் ஒன்றாவோம்” சங்கமத்தின் பொன் விழாவை முன்னிட்டு நடைபவணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து நடை பவணி ஆரம்பமாகவிருந்த நிலையில், பொலிஸார் பேரணிக்கு தடை விதித்துள்ளனர்.
குறித்த பேரணியில் வேட்பாளர்களும் கலந்துகொள்வதன் காரணமாக இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.