
யாழ். சாவகச்சேரி, கைதடி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
கைதடி பகுதியைச் சேர்ந்த 50 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
உயிரிழந்த நபருக்கு நான்கு சகோதரர்கள் உள்ளனர். அவர்கள் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் வெளிநாடுகளில் உள்ள சகோதரர்கள் தனக்கு பணம் அனுப்பவில்லை என்ற விரக்தியில் கடந்த 18ஆம் திகதி நஞ்சருந்தியுள்ளார்.
குறித்த நபர் நஞ்சருந்திய நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நேற்றைய தினம் (19) யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதுடன், உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.