
அரசியல் காரணங்களுக்காக சிறையில் உள்ள தயாபரராஜ் உதயகலாவை விடுவிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருமாறு அவரது மகள் டிலானி தயாபரராஜ், ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று தனது பேத்தியாரான அருனோதயனாதன் ரஜனியுடன் ஊடக சந்திப்பை மேற்கொண்டபோதே அவர் இதனை தெறிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சர்வமக்கள் கட்சியின் உருவாக்கத்தால் பிள்ளையானுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தனது தயார் தண்டனைக் கைதியாக சிறையில் உள்ளார்.
அரசியல் சூழ்ச்சி காரணமாக எமது தாயார் சிறையில் இருக்க நாம் நான்கு சகோதரர்களும் பாட்டியின் பராமரிப்பில் தற்போது பல அசௌகரியங்களை சந்தித்து வருகின்றோம் .
தாயார் குற்றம் செய்யாது சிறையில் இருப்பதால் பல்வேறு உடல் உபாதைகளுக்கும், மன உழைச்சலுக்கும் உள்ளாகி மருத்துவ வசதி கூட கிடையாத நிலையில் இருக்கின்றார்.
இந்த நிலை அவரது உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
எனவே எமது குடும்ப நிலையையும், பிள்ளைகளான எமது நிலையையும் கருத்தில் கொண்டு தாயாரை மனிதாபிமானமான நடவடிக்கையாக விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது